.

Thursday, August 9, 2007

தீவிரவாதிகள் தாக்குதலில் மணிப்பூர் அமைச்சர், எம்எல்ஏக்கள் தப்பினர்

மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அம்மாநில கல்வி அமைச்சர் ஜெயந்தா குமார், மற்றும் கா ரதான், லோகேஸ்சோர் சிங் ஆகிய இரண்டு எம்எல்ஏக்கள் உயிர் தப்பினர்.

சாண்டல் மாவட்டம், லோக்சோ பகுதியில் முகாமிட்டிருந்த அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக் கொண்ட அமைச்சரின் பாதுகாவலர்கள் தீவிரவாதிகளை திருப்பி தாக்கினர். இருதரப்பினருக்கும் இடையில் அரைமணி நேரத்துக்கு மேலாக துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில், பாதுகாப்பு வீரர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத தீவிரவாதிகள் அடர்ந்த காடுகளின் வழியாக தப்பி சென்று விட்டனர்.

'குகி தேசிய ராணுவம்' என்ற பெயரில் செயல்படும் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

தினமணி

NDTV.com: Manipur minister escapes militant attack
The Telegraph - Calcutta : Northeast - Militants ambush convoy
Udayavani - 1363 people dead, 2816 injured in extremist violence
July 17: Indian police accused of torturing Kuki rebel leader
July 14: The Telegraph - Calcutta : Northeast - Kuki outfit’s top gun arrested
July 14: Manipur may hold peace talks with Kuki militants

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...