.

Saturday, September 1, 2007

பத்திரிக்கையாளர் சாய்நாத்துக்கு மகசேசே விருது.

தமிழக ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான மகசாசே விருது இன்று வழங்கப்பட்டது.
ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசாசே விருதை பிலிப்பைன்ஸ் நாடு வழங்கி வருகிறது. இவ்விருதிற்குச் சிறப்பான கிராமிய பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிய தமிழக பத்திரிகையாளர் சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு "சற்றுமுன்" குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

2 comments:

Viggu said...

// தமிழக பத்திரிகையாளர்//
He was born in AP, and basically works for Kerala/Karnataka Rural journalism. Apart, he is also the rural reporter for Hindu :)

வாசகன் said...

Hindu நாளிதழில் பணிபுரிவதை வைத்தும், காலையில் மலரும் இன்னொரு நாளிதழ்ச் செய்தியை வைத்தும் தமிழகப் பத்திரிக்கையாளர் என்று எழுதி விட்டேன்.

தவறுக்கு வருந்துகிறேன். சுட்டியமைக்கு நன்றி viggu அவர்களே..!

-o❢o-

b r e a k i n g   n e w s...