.

Thursday, February 22, 2007

தேமுதிக கவுன்சிலர் திமுகவுக்கு தாவினார் - விஜய்காந்த் அதிர்ச்சி

சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இதன் மூலம் 5 இடங்களில் வென்ற மகிழ்ச்சியில் இருந்த தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு முதல் சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

தேமுதிக சார்பில் 27வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சர்தார், திமுகவுக்குத் தாவியுள்ளார்.

அதே போல தேமுதிக சார்பில் வெற்றி பெற்ற மற்ற 4 வேட்பாளர்களுமே திமுகவுக்குத் தாவ தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பாஜக சார்பில் வெற்றி பெற்ற இரு வேட்பாளர்களில் ஒருவர் திமுகவுக்குத் தாவுவது குறித்து பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார் எனத் தெரிகிறது.

உள்ளாட்சி உறுப்பினர்கள் கட்சி தாவினால் பதவி போகாது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Anonymous said...

மாணம் கெட்ட அரசியல் வாதிகள் அவர்கள்.
இந்த தேர்தலிலும் துனிந்து சென்று ஓட்டுப்போட்ட
அந்த தைரியமான அப்பாவிகளுக்கு என் ஆழ்ந்த
அனுதாபங்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...