.

Thursday, May 10, 2007

"விசா' விண்ணப்பங்களை "வடிகட்ட' அமெரிக்கத் தூதரகம் முடிவு

வெளிநாடுகளுக்கு ஆள்களைக் கடத்துவது அதிகரித்துள்ளது; அதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கூட பங்கு இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வரத் தொடங்கிவிட்டதால் அமெரிக்கத் தூதரகம் மட்டும் அல்ல எல்லா நாட்டுத் தூதரகங்களுமே கலவரம் அடைந்திருக்கின்றன. எனவே விசா கோரி விண்ணப்பிக்கிறவர்களின் ஆவணங்களைத் தீவிரமாகச் சரிபார்ப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கத் திணறும் அளவுக்கு விண்ணப்பங்கள் பலமடங்காகப் பெருகிவிட்டன. கடந்த மாதம் விசா கோரி விண்ணப்பித்துவிட்டு தில்லியிலேயே தங்கியவர்கள் செய்த செலவு மட்டும் ரூ.95 லட்சம் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. இதனால் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்துள்ளனர்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...