.

Monday, May 21, 2007

மும்பை குண்டுவெடிப்பு : நால்வருக்கு கடுங்காவல்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் போலீசார் நான்கு பேருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.கடந்த 1993 ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், 100 பேர் குற்றவாளிகள் என மும்பை தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிடி கோடே அறிவித்திருந்தார்.இவர்களது தண்டனைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளுக்கு, ஒவ்வொரு கட்டமாக தண்டனை வழங்கப்படுகிறது. இன்றைய தீர்ப்பில், வெடிகுண்டுகள் போன்ற பயங்கர வெடி பொருட்களையும், ஆயுதங்களையும் பாதுகாக்க உதவிய அப்போதைய போலீஸ் கான்ஸ்டபிள்கள் அசோக் முனேஸ்வர், எஸ.ஒய் பல்சிகார், ஆர்.மாலி மற்றும் பி.மகாதிக் ஆகியோருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...