.

Saturday, June 16, 2007

குடியரசுத்தலைவர் தேர்தல்: வேட்புமனு தொடக்கம்.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

ஜூன் 30ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூலை 2ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 4ம் தேதிக்குள் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஜூலை 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும்.

ஜூலை 25ம் தேதி குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து அப்துல் கலாம் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...