.

Saturday, June 16, 2007

'ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டேன்':-பிரதீபா பாட்டீல்.

"எனக்கென்று சுய சிந்தனை இருக்கிறது, நான் ஏன் ரப்பர் ஸ்டாம்பாக' இருக்கவேண்டும்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார் குடியரசுத்தலைவர் களத்தில் நிற்கும் பிரதீபா பாட்டில்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்திக்க டெல்லி வந்துள்ள அவர், தான் அப்படி இருந்ததேயில்லை என்றார்.

துணை குடியரசுத்தலைவரும், போட்டி வேட்பாளராக உள்ளவருமான பைரோன்சிங் ஷெகாவத்தைச் சந்திக்க நேரம் கேட்டிருந்த பிரதீபாவுக்கு, அவர் இருப்பிடத்திற்கே வந்து சந்தித்து ஆச்சரியமளித்துள்ளார் ஷெகாவத்.

நாட்டின் பெரிய பதவிக்கு ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவது மிகப்பெரிய முன்னேற்றமாகவும், இந்நாடு பெண்களுக்கு அளிக்கும் கெளரவமாகவும் அமையும் என்ற பிரதீபா, "பெண்கள் இதனால் ஊக்கமடைவார்கள்" என்றார்.

மேலும் படிக்க... TOI

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...