.

Saturday, June 16, 2007

ச: பெண்ணைத் தள்ளிய அமைச்சர் மன்னிப்பு கேட்டார்

பிஹாரின் விவசாய அமைச்சர் நரேந்திர சிங்கிடம் தன் மகனுக்கு வேலை கேட்டு வந்த விதவைத் தாயாரை தள்ளி விட்டதற்கு இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் நிதீஷ்குமார் ஒரு வாரத்திற்குள் அந்த பெண்மணியின் இறந்த கணவருக்கு உரிய தொகைகளை அவருக்குக் கொடுக்கவும் மகனுக்கு வேலைக்கு ஆணை இடவும் முதன்மை செயலருக்கு உத்திரவிட்டார்.

முன்னதாக அமைச்சர் சிங் பாகல்பூரிலுள்ள விவசாயக் கல்லூரியை காண வருகை தந்தபோது தேவி அவரை அரசு ஊழியராக பணியாற்றிய தன் கணவரின் இறப்புக்குப் பின்னர் தன் மகனுக்கு வேலை தேடி விண்ணப்பத்துடன் அணுகியபோது கூட்டத்தில் அவரை அமைச்சர் தள்ளியது டிவி படப்பிடிப்புகளில் பதிந்தது. அவர் தான் தள்ளவில்லை என்று முதலி மறுத்தபோதிலும் டிவி நிகழ்படங்களை கொண்டு எதிர்கட்சி RJD போராட்டம் நடத்தியது. தன் அரசிற்கு ஏற்பட்ட கெட்டபெயரை தவிர்க்கும் முகமாக முதலமைச்சர் நிதீஷ்குமார் உடனே காரியமாற்ற வேண்டியிருந்தது.

மேல் விவரங்கள், நிகழ்படங்களுக்கு: Minister 'pushes' woman| Impact : Bihar, Bhagalapur, Agriculture Minister Narendra Singh, Assault : IBNLive.com : CNN-IBN

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...