குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கான பெயர்களில் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், பிரணாப் முகர்ஜி, அர்ஜுன் சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை விட பிரதிபா பாட்டீல் மிகச் சிறந்தவர் தான் என்று ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள ஷெகாவத் மிக திறமை வாய்ந்தவர். இப் பதவிக்கு ஏற்ற சரியான நபர் அவர் தான். அதேவேளையில், காங்கிரஸ் முகாமில் மற்ற தலைவர்களை விடவும் பிரதிபா பாட்டீல் சிறந்தவர் தான்.
கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்வு செய்ய அனைத்துக் கட்சிகளும் தவறி விட்டன. குடியரசுத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவராக நடந்து கொண்டவர் கலாம் என்றும் அதில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
Sunday, June 17, 2007
பிரதிபா பாட்டீலுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு
Posted by
Boston Bala
at
4:52 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment