.

Friday, June 15, 2007

பயங்கர தீ விபத்து.

சினிமா படப்பிடிப்பிலிருந்த நடிகர் ஜீவா தப்பினார்.
சென்னை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியில் தனியார் பெயின்ட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை ஒட்டியுள்ள மர டிப்போவில் நடிகர் ஜீவா நடிக்கும் "தெனாவட்டு' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. நேற்று சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. நேற்று பிற்பகல் 4மணி அளவில் பெயின்ட் தயாரிப்பு தொழிற்சாலைக்குள் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. கெமிக்கல் சேமித்து வைக்கும் 4 டேங்க்குகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்த பெயின்ட் பேரல்கள் தீப்பற்றி எரிந்தன. சுற்று வட்டார பகுதியில் உள்ளவர்கள் வெடிகுண்டு வெடித்ததாக கருதி பீதியுடன் ஓடினர். படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்ததால், சண்டை காட்சி தானோ என முதலில் பலர் நினைத்தனர். பின்னர் தான் தொழிற்சாலையில் தீப்பிடித்து இருப்பது தெரியவந்து, பலரும் ஓடினர். படக்குழுவினரும் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்தனர். மேலும்....

2 comments:

Anonymous said...

மாலை மலர் poster போல் மொட்டையாகத் தலைப்பைத் தராமல், தலைப்பைப் பார்த்தே செய்தியைத் துல்லியமாகவும் தெளிவாகவும் அறிந்து கொள்ளுமாறு தலைப்புகளை வைக்கலாம்.

Adirai Media said...

சரிதான்... தவரை சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

-o❢o-

b r e a k i n g   n e w s...