.

Wednesday, July 18, 2007

ஹெலிகா'ப்டர் விபத்து: நால்வர் பலி

ஆறு நாட்களுக்கு முன் காணாமல் போன சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், ம.பி., மாநிலத்தில் விபத்திற்குள்ளானது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் ம.பி.,யில் உள்ள போபால் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அரை மணி நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறையுடனான ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை அதிகாரிகள் தேடி வந்தனர்.
ம.பி.,யில் உள்ள தேவராபலி என்ற மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி விழுந்து கிடப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பயணம் செய்த நான்கு பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர்.


தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...