.

Friday, July 6, 2007

திருவள்ளூரில் ரயில் பயணிகள் திடீர் மறியல்!

சென்னையில் இருந்து புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் புறநகர் பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டதால் அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இன்று பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து மதியம் 12:30 மணி வரை பாதித்தது. ரயில்களின் நேரம் மாற்றப்பட்டதை ரத்து செய்து விட்டு, பழையபடியே இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த மறியல் காரணமாக சென்னையில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில்கள் புறப்பட முடியாமல் போனது. ஏலகிரி மற்றும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...