.

Wednesday, August 22, 2007

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் என்ன தவறு? - உச்ச நீதிமன்றம் கேள்வி.

பிற்படுத்தபட்டோர்க்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதில் என்ன தவறு உள்ளது என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய விசாரணையின் போது இடஒதுக்கீட்டை அமல் படுத்துவதில் என்ன தவறு என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் நாட்டில் உள்ள 20 முதல் 30 சதவீதமே உள்ள பிரிவினர் மட்டும் சலுகைகளை பெற வேண்டும் என்பது விதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமலர்

1 comment:

மாசிலா said...

அட்றா சக்கை! அப்படி போடு நயினா!

ச்சும்மா அதிருதில்ல?

இஇஇது கேள்வி! இதுதாம்பா கேள்வி!

அட இதுதாம்பா சரியான கேள்வின்னேங்!

-o❢o-

b r e a k i n g   n e w s...