.

Monday, August 13, 2007

இந்தியா: ஆடைவடிவமைப்பாளர் தீயிட்டுக் கொலை

ஆகஸ்ட் 11,சனியன்று தில்லியில் 36 வயது தர்வீன் சூரி என்ர ஆடைவடிவமைப்பாளர் மீது இரு அடையாளம் காணப்படாத நபர்களால் அமிலம் மற்றும் மண்ணெண்ணெயால் நனைக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டார். வசதியான கிரேட்டர் கைலாஷ் பகுதியில் வாழும் அவர் 80% தீக்காயங்களுடன் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கீழ் உடல்பகுதி முழுவதும் கருகியுள்ளநிலையில் அவர் உடல்நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளது.

தன்னுடைய கணவர் வீட்டினருடனும் தன்னிரு பெண்களுடனும் மகிழ்ந்திருந்த தர்வீன் வீட்டிற்கு இரவு 7.30 மணிக்கு நீலநிற பல்சர் பைக்கில் வந்த இருவர் அழுத்திய அழைப்புமணி சாவுமணியாக மாறியது. அழைப்புமணிக்காக கதவைத் திறந்தவரை வெளியே இழுத்து அமிலத்தையையும் கெரசினையும் கொட்டி தீக்குச்சியை கொளுத்திப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தர்வீனுக்கு அவரது கணவர் நவீனுடன் இருந்த பிணக்கையொட்டி காவலர்களின் சந்தேகமும் விசாரணையும் தொடர்கிறது. சம்பவத்தன்று கோவாவில் இருந்த அவரின் அலுவலக தோழி இரச்னாவுடனான தொடர்பும் ஆராயப்படுகிறது.

India : Fashion designer doused in acid, burnt alive - Fashion News India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...