.

Wednesday, March 21, 2007

சற்றுமுன்- நந்திகிராம்:மே.வங்க அரசு பணிந்தது

பல்வேறு மட்டங்களிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு காரணமாக நந்திகிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிடுவது என்றும்,போலீஸ் படையை அங்கிருந்து வாபஸ் பெறுவது என்றும் ஆளும் இடது சாரி கூட்டணி முடிவு செய்துள்ளது.

நந்திகிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த அவ்வூர் மக்களிடையேகடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,கடந்த14 ம் தேதியன்று அங்கு நிகழ்ந்த போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரி கூட்டணிக்கும் இச்சம்பவம் பெரும் அவப்பெயரைஏற்படுத்திவிட்டது.

Yahoo Tamil

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...