.

Sunday, April 8, 2007

திண்டிவனம் விபத்து:பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1 லட்சம் நிதி.

திண்டிவனம் ஜீப் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இன்று தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்பட்டது. திண்டிவனம் அருகேயுள்ள செண்டூரில் வெடிப்பொருட்கள் ஏற்றி வந்த ஜீப் நேற்று வெடித்து சிதறியது. இதில் 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி செண்டூர் கிராமத்துக்க்கு வந்தார். வெடிவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...