.

Sunday, April 8, 2007

பள்ளிக்கூட கதவுகளில் கோந்து தடவி குறும்பு!

கார்ஸ்லீட்: பள்ளிக்கூட கதவுகளில் கோந்தை ஊற்றி மாணவர்கள் விஷமம் செய்துள்ளனர். இதனால் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கார்ல்ஸ்பாட் உயர்நிலைப் பள்ளியில் பாடமே நடக்கவில்லை.

காலையில் பள்ளிக்கூடத்துக்கு முதலில் சென்ற ஆசிரியர், எந்தக் கதவையும் திறக்க முடியாதபடிக்கு, பூட்டுகளில் ""ஏதோ'' தடவப்பட்டிருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். பிறகு பள்ளிக்கூட முதல்வருக்குத் தெரியப்படுத்தினார். பள்ளிக்கூடத்துக்கு பொறுப்பான அலுவலர்கள் திரண்டுவந்து, கோந்து ஊற்றப்பட்ட பூட்டுகளைத் திறக்க முற்பட்டனர். மொத்தம் உள்ள 100 கதவுகளில் 27 கதவுகளை மட்டுமே மதியம்வரை திறக்க முடிந்தது.

பள்ளிக்கூடத்தின் 3 ஆயிரம் மாணவர்களில் பெரும்பாலானவர்களால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை. எனவே உடல்பயிற்சி அறைக்கும் பிற இடங்களுக்கும் சென்று பொழுதைக் கழிக்குமாறு மாணவர்கள் பணிக்கப்பட்டனர்.

School Children Glue School Doors Shut: "Students at a San Diego high school decided to glue the doors to the entire school shut for and end of spring break prank. They plugged all the locks on 100 doors with super strength glue."

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...