.

Thursday, April 5, 2007

ச:சிடி விவகாரம் பா.ஜ.வுக்கு நோட்டீஸ் : தேர்தல் ஆணையம் முடிவு

புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

சர்ச்சையான சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.கட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.வினர் சிடி ஒன்றினை வெளியிட்டனர். இந்த பிரச்சார சிடியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு ஆகிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்துத்துவாவை கடுமையாக வலியுறுத்தும் பிரச்சாரமும் அதில் இடம்பெற்றுள்ளது.

இது முஸ்லிம் மக்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக அக்கட்சி தலைமையிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி,அக்கட்சியினர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

"Yahoo - Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...