.

Thursday, April 5, 2007

சச்சினுக்கு வங்கதேச கேப்டன் ஆதரவு

ஜார்ஜ் டவுன், ஏப். 5: பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் கருத்தால் மனம் நொந்துபோயுள்ள சச்சின் டெண்டுல்கருக்கு வங்கதேச அணியின் கேப்டன் ஹபிபுல் பஷார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

""சேப்பல் என்ன வேண்டுமானாலும் கருத்து சொல்லட்டும். ஆனால் சச்சின் விளையாட வேண்டியது நிறைய இருக்கிறது. அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியவில்லை. வெறும் 34 வயதுதான் ஆகிறது. அவர் ஓய்வு பெறுவதற்கு இது தருணம் அல்ல'' என்கிறார் பஷார். (இவருக்கு 35 வயது ஆகிறது).

சச்சின் மட்டுமல்ல, இந்திய அணியே ஒட்டுமொத்தமாக கேவலப்பட்டதற்கு காரணம் பஷாரும் அவரது இளம் சகாக்களுடைய ஆட்டமும்தான் காரணம்.

ஆம். போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு கொடுத்த கடுமையான அதிர்ச்சி தோல்விதான், சேப்பல் பேச்சு போன்ற சர்ச்சைகளுக்குக் காரணம்.

அந்த ஆட்டத்தில் 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களம்புகுந்த சச்சின், 26 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இடதுகை ஸ்பின்னர் அப்துர் ரசாக் வீசிய பந்து இன்சைட் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ரஹீமிடம் தஞ்சம் அடைய, சோதனையே என நினைத்து பெவிலியன் திரும்பினார் சச்சின்.

அந்த வெற்றியால் இப்போது சூப்பர்-8 போட்டியில் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...