.

Thursday, April 5, 2007

'வியாபாரி' திரையிட்ட தியேட்டர் மீது தாக்குதல்

பெங்களூர், ஏப். 5: பெங்களூரில் தமிழ்த் திரைப்படம் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து தியேட்டர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்கிறது; புதன்கிழமை "வியாபாரி' படம் திரையிட்ட தியேட்டரில் புகுந்து கல்வீசித் தாக்கினர். பெங்களூர் மல்லேசுவரம், சம்பிகே சாலையில் அமைந்துள்ளது சம்பிகே திரையரங்கு. இங்கு கடந்த வாரம் வெளியான "வியாபாரி' தமிழ் திரைப்படம் திரையிடப்பட்டு வந்தது. புதன்கிழமை காலை கன்னட ரக்ஷண வேதிகே தொண்டர்கள் ஒரு கும்பலாக திடீரென சம்பிகே திரையரங்குக்குள் புகுந்தனர்.

பின்னர் தமிழ் திரைப்படம் திரையிட எதிர்ப்புத் தெரிவித்து தர்ணா மேற்கொண்டனர். இதையடுத்து ஓடிக்கொண்டிருந்த வியாபாரி திரைப்படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. திரையரங்குக்குள் இருந்த ரசிகர்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பதற்றத்துடன் வெளியே வந்தனர். பின்னர் திரையரங்கு உரிமையாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கன்னட ரக்ஷண வேதிகே தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதற்கு உடன்படாத அவர்கள் திடீரென திரையரங்கு மீது தாக்குதல் நடத்தினர். இதில் திரையரங்கின் டிக்கெட் விற்பனை செய்யும் இடத்திலிருந்த கண்ணாடி உடைந்தது. இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் திரையரங்கு மீது தாக்குதல் நடத்திய கன்னட ரக்ஷணா வேதிகே தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த திரையரங்கில் தற்காலிகமாக தமிழ் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது.

பெங்களூர் மாரத்தஹள்ளியில் உள்ள இன்னோவேட்டிவ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் செவ்வாய்க்கிழமை மொழி தமிழ்த் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தபோது திரையரங்கு மீது தாக்குதல் நடத்திய ரக்ஷண வேதிகே தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...