.

Thursday, April 5, 2007

பிரிட்டன் கடற்படை வீரர்களை விடுவித்தது ஈரான்

டெஹரான்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2007

கடந்த 13 நாட்களாக சிறை வைத்திருந்த பிரிட்டன் கடற்படை வீரர்கள் மற்றும் பயணிகள் 15 பேரை ஈரான் அரசு நேற்று விடுவித்தது.

கடந்த மாதம் 23ம் தேதி ஈரானிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி பிரிட்டன் கப்பலில் வந்த கடற்படை வீரர்கள் ஏழு பேர் மற்றும் பயணிகள் 8 பேர் உட்ப்ட 15 பேரை ஈரான் அரசு சிறை பிடித்தது. இவர்களை விடுவிக்குமாறு பிரிட்டன் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அதற்கு அடிபணிய ஈரான் அரசு மறுத்து விட்டது.

சிறைபிடித்து 13 நாட்கள் கடந்து விட்ட நிலையில், ஈஸ்டர் பண்டிகைக்கு பிரிட்டன் மக்களுக்கு பரிசாக சிறையில் உள்ள பிரிட்டன் பயணிகளையும், வீரர்களையும் விடுவிடுப்பதாக அந்நாட்டு அதிபர் மகமுத் அகமதின்ஜத் தெரிவித்தார்.

"Yahoo - Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...