.

Friday, April 6, 2007

வேளாண் பல்கலை. மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக புகார்: பேராசிரியர் கைது

கோவை, ஏப் 6: மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கோவை வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிலிப் (45) கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த தனவேலின் மகள் லீனா (23). கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்ஸி. முதலாண்டு படித்து வருகிறார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தார். பல்கலை.யின் வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் பேராசிரியர் பிலிப், லீனாவுக்கு துறை வழிகாட்டியாக இருந்துள்ளார்.

பாடங்களில் சந்தேகம் கேட்கச் செல்லும் லீனாவிடம் தவறாகப் பேசி தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த லீனா புதன்கிழமை மாலை சாணிப்பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...