.

Friday, May 11, 2007

புழல் சிறை அருகே 65 வீடுகள் சாம்பல்

புழல் சிறைச்சாலை பின்புறம் உள்ள திருமலை நகர் குடியிருப்பு பகுதியில் 65 வீடுகள் நேற்று பிற்பகல் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதில் ஒரு பெண் மயங்கிச் சாய்ந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். இங்கு 100க்கும் மேற்பட்ட குடிசைகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடுகள் உள்ளன.

தகவல் அறிந்து மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, திருவள்ளூர் கலெக்டர் ரன்வீர் பிரசாத், புழல் பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன், மற்றும் அதிகாரிகள் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்கினர். அதே பகுதியில் உள்ள தனியார் இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...