.

Monday, May 21, 2007

திருப்பதி கோவிலின் புதிய டிவி சேனல்: அக்டோபர் முதல் ஒளிபரப்பு

திருப்பதி கோவிலின் சார்பில் புதிய டிவி சேனலை ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின்போது இந்த ஒளிப்பரப்பை ஆரம்பிக்கவுள்ளது. இந்த சேனலில் கோவிலில் நடைபெறும் சேவைகள், முக்கிய நிகழ்ச்சிகள், பெருமாளின் பெருமைகள் பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும்.

மேலும் ஒரு வயதுக்குட்பட்ட கைக் குழந்தைகளுடன் தரிசனத்திற்கு வரும் தாய்மார்களுக்கு திருமலை பிரதான வாயில் வழியாக சிறப்பு அனுமதி அளிக்க தேவஸ்தான வாரியம் முடிவு செய்துள்ளது.

1 comment:

வல்லிசிம்ஹன் said...

நல்ல செய்திதான்.

இதிலேயும் ஊழல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...