.

Saturday, June 2, 2007

சாமான்யரின் வெற்றி: பாஸ்போர்ட் அதிகாரிக்கு அபராதம்!

நாக்பூரைச் சேர்ந்தவர் தஸ்னீம். இவர் கடந்த ஆண்டு அங்குள்ள மண்டலபாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று தனக்குபாஸ்போர்ட் வழங்க கோரி அதிகாரி வி.பி. காம்பிளியிடம் விண்ணப்பம் ஒன்றை கொடுத்தார். அதற்கு அவர் விண்ணப்பத்துடன் சில ஆவணங்களையும் தர வேண்டும். இல்லையென்றால்பாஸ்போர்ட் வழங்க இயலாது என்று கைவிரித்தார்.

இதையடுத்து தஸ்னீம் என்னென்ன ஆவணங்களை தர வேண்டும் என்று காம்பிளி யிடம் கேட்டார். ஆனால் அவர் சரியானபதில் எதுவும் சொல்லவில்லை.

தஸ்னீம்பலமுறைபாஸ்போர்ட் அலுவலகம் வந்துபாஸ்போர்ட் பெறுவதற் கான வழிமுறைகள்பற்றி கேட்டார். அதற்கும் அவர் உரியபதில் அளிக்காமல் இழுத்தடித்தார்.இப்படியே அவர் 100நாட் களாக தாமதம் செய்ததால் தஸ்னீம் வேதனை அடைந்தார்.

பின்னர் அவர் தனக்குபாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் செய்த அதிகாரி காம்பிளி மீது மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம் காம்பிளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
அதாவது தாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ. 250 வீதம் 100 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காம்பிளி அபராதம் கட்டத் தவறினால் அவரது சம்பளத்தில் இருந்து அபராதபணம் கழிக்கப்படும் என்று ஆணையம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்புபாஸ்போர்ட் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஸ்னீம்பலமுறைபாஸ்போர்ட் அலுவலகம் வந்துபாஸ்போர்ட் பெறுவதற் கான வழிமுறைகள்பற்றி கேட்டார். அதற்கும் அவர் உரியபதில் அளிக்காமல் இழுத்தடித்தார்.

இப்படியே அவர் 100நாட் களாக தாமதம் செய்த தால் தஸ்னீம் வேதனை அடைந்தார்.

பின்னர் அவர் தனக்குபாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் செய்த அதிகாரி காம்பிளி மீது மத்திய தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். இதை விசாரித்த ஆணையம் காம்பிளிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.

அதாவது தாமதம் செய்த ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ. 250 வீதம் 100 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காம்பிளி அபராதம் கட்டத் தவறினால் அவரது சம்பளத்தில் இருந்து அபராதபணம் கழிக்கப்படும் என்று ஆணையம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.இந்த தீர்ப்புபாஸ்போர்ட் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மாலைமலர் செய்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...