.

Saturday, June 2, 2007

புத்தகம் இல்லா கல்வித்திட்டம்!

தொடக்கப்பள்ளி மாணவர் களின் புத்தகச்சுமையை குறைத்து, அவர்கள் தானாக கல்வி கற்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பட அட்டை களுடன் கூடிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் புத்தகங் கள் இல்லாமல் விளக்கப்படங்கள் அடங்கிய அட்டைகளை வைத்து கல்வி கற்கலாம்.

கடந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட பள்ளி களில் 1, 2-ம் வகுப்புகளுக்கு புத்தகம் இல்லாத பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வருகிற புதிய கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 3, 4, 5-ம் வகுப்புகளுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து பட அட்டைகளை வைத்து மாண வர்களுக்கு கல்வி கற்பிப்பது குறித்து, தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு செயல் வழி கற்றல் பயிற்சி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி: ஜூன்2, 2007

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...