.

Thursday, July 19, 2007

அதிமுக வாக்களித்தது ஏன்? - ஜெ. விளக்கம்

ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் 3வது அணி குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியிருந்தது. ஆனால்அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றம் எம்.பி.,க்கள் திடீர்-வாக்களித்தது குறித்து ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 17ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், குடியரசுத் தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை. இருப்பினும், அது அவரவர்களுடைய விருப்பம் என்று தெரிவித்திருந்தது, மேலும், குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிப்பதை கட்சி தலைமையால் கட்டுப்படுத்தமுடியாது எனவும் தெரிவித்திருந்தது. இந்த விவாதத்தை அடிப்படையாக கொண்டு அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,கள் அவர்களாகவே ஆலோசனை நடத்தி, இறுதியில், தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை அடிப்படையாக கொண்டு குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்து வாக்களித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்

செய்தி ஆதாரம்: தினமலர்

முந்தைய ;சற்றுமுன்'கள்: குடியரசுத்தலைவர் தேர்தலில் ஷெகாவத்துக்கு ஜெ.ஆதரவு
ஜனாதிபதி தேர்தல் அ.தி.மு.க.-ம.தி.மு.க. `திடீர்' ஓட்டு!

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...