.

Thursday, July 19, 2007

காரைக்கால்: சுயாட்சி வேண்டி ஒரு இலட்சம் கையெழுத்து.

காரைக்கால் தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறை களிலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பின்தங்கிய நிலையில் உள்ள காரைக்கால் பகுதி முன்னேற, புதுச் சேரியிலிருந்து பிரிந்து காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்க கோரி பல்வேறு போராட்டங்கள் கரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு சார்பில் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு 1 லட்சம் கடிதங்களை அனுப்பிட கையெழுத்து இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி மக்களிடமிருந்து முகவரி மற்றும் கையெழுத்துடன் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு ஒரு லட்சம் மனுக்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த இயக்கத்தை தியாகி ரத்தினசாமி முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு நிர்வாகிகளும், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


மாலைமலர்


முந்தைய சற்றுமுன்: காரைக்காலுக்கு யூனியன் பிரதேச உரிமை?

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...