.

Friday, July 20, 2007

முன்னால் முதல்வர் தம்பி வீட்டில் வருமான வரி சோதனை !

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தினார்கள். அப்போது கணக்கில் காட்டப் படாத சொத்து ஆவணங்கள், பாங்கி கணக்குகள், கண்டு பிடிக்கப்பட்டன.முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ராஜா வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது. அப்போது சொத்து குவிப்பு சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்றினார்கள். அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் என்று பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் தம்பி ராஜா வீட்டுக்கு சென்றனர். ஏற்கனவே சோதனை நடத் தியது தொடர்பாக மீண்டும் சொத்து மதிப்பீடு பற்றி கேட்டனர். காலை 8.30 மணியில் இருந்து மதியம் வரை இந்த விசாரணை நீடித்தது.இது பற்றி பத்திரிக்கையாளர்கள் பன்னீர்செல்வம் அவர்களை தொடர்புக்கொண்டு பேசுகையில் இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறினார்.

1 comment:

சின்னப் பையன் said...

சும்மா choice-லே விடுங்க சார்...அடுத்த தடவை நீங்க ஆட்சிக்கு வரும்போது பழிக்கு பழி வாங்கிடலாம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...