.

Sunday, July 22, 2007

ஆப்ரிக்க ஊழியர்களை இந்திய மற்றும் சீன முதலீட்டாளர்கள் மோசமாக நடத்துவதாக குற்றச்சாட்டு

இந்திய மற்றும் சீன முதலீட்டாளர்கள், தமது ஆப்ரிக்க ஊழியர்களை மோசமாக நடத்துவதாக சாம்பியாவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டுக் கம்பெனிகள் மிகவும் குறைவான ஊதியத்தை வழங்குவதாகவும், போதுமான ஊழியர் பாதுகாப்பு நடைமுறைகள் எதனையும் பேணாமல், அவர்களை நீண்ட நேரம் வேலை செய்யப் பணிப்பதாகவும் ஆயர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு முதலீட்டின் மூலம் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகளை தாம் வரவேற்கின்ற அதேவேளை, அது சாம்பிய தொழிலாளர்களைப் பாதிப்பதாக அமையக் கூடாது என்று அதிபர் லெவி மெவனவச அவர்களுக்கு அனுப்பிய எதிர்ப்பு மனு ஒன்றில் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

BBC Tamil

ZAMBIA: Local textile workers should not be abused

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...