.

Thursday, August 16, 2007

ஹிமாச்சலில் வெள்ளம்: ஆறு சடலங்கள் மீட்பு, 52 பேர் காணவில்லை

இமாச்சல பிரதேசத்தில் நேற்று பெய்த பெருமழையில் சிம்லா மாவட்டத்தில் ஒரு கிராமமே திடீர் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போனது.அந்த இடிபாடுகளை இராணுவத்தினர் மற்றும் துணைராணுவத்தினர் உதவியுடன் அகற்றி பிழைத்தவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியில் இதுவரை ஆறுபேரின் உடல்களே கிடைத்திருக்கின்றன. இன்னும் 52 பேர் சிம்லாவிலிருந்து 175 கி.மீ தூரத்திலுள்ள கான்வி என்ற அந்தக் கிராமத்திலிருந்து காணவில்லை. மழையினால் ஏற்பட்ட மலைச்சரிவு பெரும் பாறைகளை உருட்டி விட்டு வழியில் இருந்த அனைத்து வீடுகளையும் தவிடுபொடியாக்கியது. இறந்த அறுவரில் ஐவர் பெண்டிர். காணாமல் போனவரிலும் பெரும்பான்மையினர் பெண்களே. அவர்கள் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த திடீர்மழையும் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

HP cloudburst: 6 bodies found, 52 still missing-India-The Times of India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...