.

Wednesday, August 8, 2007

ஊர்மக்கள் அனைவரையும் கூண்டோடு கொல்ல சதி: குடிநீர் கிணற்றில் விஷம்

குடிநீர் கிணற்றில் விஷத்தை கலந்ததுடன் பல்லிகளையும் கொன்று போட்ட மலைராஜை்(வயது 37) கைது செய்யப்பட்டார்.

போலீசில் அவர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே உள்ள அரியகோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த அனிச்சகுடி காளியம்மன் கோவில் அருகே அந்த கோவிலுக்கு பூஜை நடத்தும் வேளார் வகுப்பை சேர்ந்த 15 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். என் தந்தை செல்வத்திற்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு நான் உள்பட 5 குழந்தைகளும், 2-வது மனைவிக்கு செந்தில், உடையான் உள்பட 4 குழந்தைகளும் உள்ளனர்.

நான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சவுதி அரேபியா சென்றேன். நான் வெளிநாட்டில் இருந்த போது உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு செந்திலும், உடையானும் என் மனைவியிடம் பணத்தையும், நகையையும் கடனாக வாங்கியுள்ளனர். ஆனால் இதுவரை அதை திருப்பி கொடுக்கவில்லை. 5 லட்சம் பணத்தையும் என் மனைவி ஏற்கனவே போட்டிருந்த 5 பவுன் நகை உள்பட 30 பவுன் நகையையும் அவர்கள் மோசடி செய்து விட்டார்கள்.

இதனால் அவர்களையும், அவர்களுக்கு ஆதரவாக பேசிய 15 குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை செய்ய வேண்டும் என்று எனக்கு வெறி ஏற்பட்டது.

தேவிபட்டினத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்த நான், அங்கு திரிந்த பல்லிகளை எல்லாம் கொன்று பாலிதீன் பையில் சேகரித்தேன். பின்பு ராமநாதபுரம் வந்து அரண்மனை அருகே உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் அரை கிலோ போரோடாக்ஸ் என்ற குருணை மருந்தை வாங்கினேன். அதை கிணற்றில் ஊற்றி விட்டு என் மனைவி ஊரான சிறுவயலுக்கு வந்து விட்டேன். ஆத்திரத்தில் அறிவிழந்து விட்டேனே என்று இப்போது வருத்தமாக உள்ளது.

தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...