.

Wednesday, August 8, 2007

சிண்டிகேட் வங்கி: இந்தி தெரிந்தால் தான் வேலை

இந்தி மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற சிண்டிகேட் வங்கியின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

சிண்டிகேட் வங்கி நானூறு எழுத்தர்கள், முன்னூறு அதிகாரிகளை பணியமர்த்த அறிவிப்பு செய்தது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பில் இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்தியை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...