.

Saturday, August 25, 2007

இரயில்நிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு

தெற்கு இரயில்வேயின் பாலக்காடு கோட்டதிலிருந்து தமிழகப்பகுதியைப் பிரித்து சேலம் கோட்டம் அமைப்பதை எதிர்க்கும் கேரள அரசியலுக்கு எதிராக கேரளாவிற்குச் செல்லும் இரயில்களை மறிக்கும் போராட்டம் சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இன்று காலை உற்சாகமாகத் தொடங்கியது. அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் நடந்த இப்போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருந்த பல மலயாளிகள் அவதியுற்றனர். இதனையடுத்து இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் முதல்வர் மு.கருணாநிதியுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது சேலம் இரயில்வே கோட்டம் அமைவது குறித்து கொடுத்த உறுதிமொழியின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...