.

Saturday, August 25, 2007

வெற்றியின் வாயிலில் இந்தியா

பிரிஸ்டலில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. சவுதாம்டனில் நடந்த முதல் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா, அதிரடி ஆட்டத்தினால் 329 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய தரப்பில் அதிகபட்சமாக துவக்க வீரர் டெண்டுல்கர் 99 ரன்களைக் குவித்தார். கேப்டன் டிராவிட் 92 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஃப்ளின்டாஃப் 56 ரன் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து தற்போது 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை எடுத்துள்ளது. வெற்றி பெற 78 பந்துகளில் 116 ரன்கள் தேவை.

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற ஜாகிர் கான் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.

ஆட்ட விவரம்: Cricinfo

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...