.

Thursday, August 2, 2007

மணிப்பூரில் பத்திரிகைகளை பிரசுரிக்க மறுப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கிளர்ச்சிக்காரர்களின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அந்த மாநில பத்திரிகையாளர்கள் தமது பத்திரிகைகளை பிரசுரிக்க மறுத்துள்ளனர்.

உள்ளூர் ஆங்கிலப் பத்திரிகையயான சங்காய் எக்ஸ்பிரஸ் (Sangai Express) நாளேட்டின் ஆசிரியருக்கு தபாலில் கைக்குண்டு ஒன்று கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கங்லேய்பெக் மக்கள் புரட்சிகர இராணுவம் (Peoples Revolutionary Army of Kangleipak (Prepak)) என்னும் பிரிவினைவாதக் கிளர்ச்சிக்குழுவின் ஒரு பிரிவினரே இந்தக் கைக்குண்டை தனக்கு அனுப்பியதாக அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தெரிவித்துள்ளார். அந்தக் குண்டு வெடிக்கவில்லை. போட்டிக்குழு ஒன்றின் அறிக்கை ஒன்றைப் பிரசுரித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று அந்தக் குழு தன்னை மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

BBC Tamil

BBC NEWS | South Asia | Papers shut in Indian north-east
NDTV.com: Imphal: Militant attack on media house
The Telegraph - Calcutta: Grenade gift sparks media shutdown

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...