.

Friday, August 24, 2007

ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

பிரதமர் மன்மோகன்சிங்கைஅவதூறாக பேசிய ஜெயலலிதாவை கண்டித்து போயஸ் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருவர்உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அறிக்கைவெளியிட்டஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இதை கண்டித்து காங்கிரஸ்கட்சிசட்டமன்றத் தலைவர் சுதர்சன் தலைமையில் இன்று காலை ஏராளமானவர்கள் ஜெயலலிதா வீடுள்ள போயஸ் கார்டன் முன்பு திரண்டுஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அருள்அன்பரசு, விஷ்ணுபிரசாத் இருவர் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற கல்வீச்சில் அ.தி.மு.க-வைச்சேர்ந்த குப்பன் என்பவர் காயமடைந்தார். மேலும்.... சற்றுமுன் அதிமுக சார்பில் மாவட்ட ஆட்ச்சியர் அலுவலகம் எதிரில் நிலவரிஉயர்வைகண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இதில் முதல்வர்கருணாநீதிக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கோஷம் போட்டனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...