.

Friday, August 17, 2007

மீண்டும் துவங்கியது ஹெல்மெட் வேட்டை

ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் மீண்டும் கெடுபிடி செய்யத் தொடங்கியதால், ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பேர் பிடிபட்டனர். சென்னை ஐகோர்ட்டில்,`இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க உத்தரவிட வேண்டும்' என பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அரசிடம் ஐகோர்ட் விளக்கம் கேட்டதால், ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அரசு கொண்டு வந்தது. அதனால் வாகன ஓட்டிகளில் பெரும்பாலோனோர், ஹெல்மெட் வாங்கி பயன்படுத்த துவங்கினர்.இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் முதல்வர் கருணாநிதி, `ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், போலீசார் பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' என அறிவித்தார். எனினும் சமீபத்தில் ஐகோர்ட்டில்,`ஹெல்மெட் அணிவதை ஏன் கட்டாயமாக்கவில்லை' என கேள்வி எழுப்பப்பட்டதால் போலீசார் சுறுசுறுப்பாக்கி அபராதம் விதிக்கத் தொடங்கினர். இன்று ஒரே நாளில் மட்டும் எட்டு ஆயிரத்து 910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் புலம்பல் அதிகரித்து வருகிறது.

நன்றி: தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...