.

Saturday, August 4, 2007

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக எப்போதும் கடைப்பிடித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். பெங்களுரில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

அரசியலில் பிளவுபடுத்தும் கொள்கையை கொண்டிருப்பது பாஜகவின் முக்கிய கொள்கையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 5 ஆண்டுகளில் நாட்டை பல்வேறு வழிகளில் பிளவுபடுத்தி வைத்திருந்தது. அதை கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீர்படுத்தியுள்ளது. மேலும், முதலீடு, சேமிப்பு ஆகியவை நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 35 சதவீதமாக அதிகரிக்கச் செய்துள்ளன. இதனால் இந்தியாவை உலக நாடுகள், பொருளாதாரத்தில் மிகவேகமாக வளர்ந்துவரும் நாடு என்று அங்கீகரித்துள்ளன.

இது இந்தியாவுக்கு பெருமையைத் தந்துள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

நன்றி: தமிழன் செய்திகள்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...