.

Tuesday, March 13, 2007

190 போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா

இந்தியா 190 போர் விமானங்களையும் 80 ஹெலிகாப்டர்களையும் வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டு கையெழுத்து ஆகிறது. இந்த தகவலை விமானப் படை தலைமை தளபதி எஸ்.பி. தியாகி தெரிவித்தார்.
தென் பிராந்திய விமானப் படை தலைமையகத்தைப் பார்வையிட்ட விமானப் படை தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் எஸ்.பி. தியாகி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்திய விமானப் படைக்கு 126 போர் விமானங்களும் கூடுதலாக 40 சுகோய்-30 ரக விமானங்களும் வாங்கப்படும். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சிறந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்படும். அதற்கான ஒப்பந்தம் இந்த ஆண்டே கையெழுத்து ஆகும்.

தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...