.

Tuesday, March 13, 2007

பிரிட்டிஷ் ராணியுடன் ஷில்பா ஷெட்டி சந்திப்பு

"பிக் பிரதர்' தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ் பெற்றுள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி லண்டனில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தை சந்தித்தார்.
அவருக்கு பேச்சாளர் என்ற பெருமையை பெற்றுத் தந்தது.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத், அவரது கணவர் பிலிப் முன்னிலையில் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தின நிகழ்ச்சியில் பேசிய ஐந்து சொற்பொழிவாளர்களில் ஷில்பா வும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. "வெஸ்ட் மின்ஸ்டர் அபே'வில் நடந்த இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி இனப் பாகுபாடு, எய்ட்ஸ் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி உரையாற்றினார்.

உரை முடிந்ததும் ஷில்பா, எலிசபெத் மகாராணியை சந்தித்தார். அப்போது ஷில்பா அணிந்திருந்த குதியுயர்ந்த காலணியால் தவறி விழ இருந்தார். அச்சமயம் மகாராணியின் அருகில் இருந்த அவரது கணவர் இளவரசர் பிலிப், ஷில்பா ஷெட்டியை பார்த்து "கவனம்' என்று கூறினார்.

மாலைச் சுடர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...