.

Monday, March 19, 2007

'காந்தி குடும்பம் பாபர் மசூதி இடிப்பை தடுத்திருக்கும்'

உத்திரப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் இராகுல் காந்தி பேசுகையில், பாபர் மசூதி நரசிம்ம ராவின் தவறு என்றும். காந்தி குடும்பம் அரசியலில் அப்போது இருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது என்றும் கூறினார்.

மேலும் அவர் தந்தை இராஜிவ் காந்தி தன் தாயாரிடம் நான் பாபர் மசூதிக்கு முன் நிற்கவும் தயார், என்னைக் கொன்றபின்னரே மசூதியை இடிக்க விடுவேன், எனக் கூறியதாகவும் பேசினார்.

Gandhi family would have prevented Babri demolition: Rahul

6 comments:

Subramanian said...

ஃபோபர்ஸ் பீரங்கி வழக்கு மூலம் கமிஷன் பெற்று நாட்டின் மானத்தையே விற்று விட்ட காந்தியின் குடும்ப வாரிசு சொல்கிறதாம்.மக்களே நம்புங்கள்.
நரசிம்மராவ் என்ன எதிர்க்கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரா?காங்கிரஸ்காரர் தானே?
உங்கள்குடும்ப ஆளுமையில்தானே இருந்தார்?
அப்போதே கூறி இருக்கலாமே?
என்ன் செய்வது?பாழும் அரசியல் ஓட்டுவங்கிக்காக இப்படியெல்லாம் உளறச் சொல்கிறது.

G.Ragavan said...

உளறல். பேத்தல். என்று எத்தனை சொற்கள் போட்டாலும் பொருத்தமாக இருக்கும் ராகுலின் இந்தப் பேச்சுக்கு. ஆனா நாளைக்கு ஏதாவது தவறு நடந்தால் மன்மோகன்சிங்தான் பொறுப்பு என்பார்கள் போல. சீச்சீ. வெட்கம் கெட்டவர்கள்.

சிவபாலன் said...

Now Ragul Tuned up to a Real Politician.. Ha Ha Ha..

suvanappiriyan said...

//Now Ragul Tuned up to a Real Politician.. //

Best comment

வஜ்ரா said...

இதுக்கு ராஹுல் காந்தி கொட்டைரோச்சி பிரதமராகியிருந்தால் பாபர் மசூதியை போபோர்ஸ் பீரங்கி பேரத்தின் ஊழல் பணத்தை வைத்து மீண்டும் நிர்மாணித்திருப்பார் என்று சொல்லியிருக்கலாம்.

அடுத்த காந்தி குடும்பத்து திம்மி ரெடி.

ராஹுல் வாந்தி வருக. உவ்வே!

கால்கரி சிவா said...

இன்னொரு ஆதிக்கவாதி நேரு காந்தி குடும்பத்திலிருந்து. என்ன திமிர் அப்பா.

காங்கிரஸ் பிரதமர்களில் சிறந்த ஆட்சியை தந்தவர் நரசிம்மராவ். மெத்தப் படித்தவர், அறிவாளி இன்ன பிற அத்தகய அறிவாளியை ஒரு அறைகுறை குறைகூறுகிறது. இதுதானப்பா இந்திய அரசியல்

-o❢o-

b r e a k i n g   n e w s...