தந்தை, தங்கை கணவர் மீது தாக்குதல்; ஓரத்த நாட்டில் பதற்றம்: போலீஸார் குவிப்பு
ஒரத்தநாடு, ஏப். 7: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டில் அதிமுக பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜனின் வீடு மர்ம கும்பலால் வியாழக்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கப்பட்டது.
அதிமுக தென்சென்னை மாவட்டச் செயலராகவும், தி. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் உள்ளவர் வி.பி. கலைராஜன். இவரது தந்தை வீடு ஒரத்தநாடு கம்மாளத் தெருவில் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கலைராஜனின் வீட்டுக்கு காரில் வந்தது. அக்கும்பல் அரிவாள், கட்டை மற்றும் கிரிக்கெட் மட்டை ஆகியவற்றைக் கொண்டு வீட்டின் முன்புறம் இருந்த ஓடுகள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் ஆகியவற்றைச் சேதப்படுத்தியது.
அப்போது வெளியே வந்த பட்டுசாமியையும் குமரவேலுவையும் இக்கும்பல் கட்டையால் தாக்கியது. இதில் இருவரும் காயமடைந்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வெளியே வந்தவுடன் அக்கும்பல் தப்பியோடியது.
வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் அதிமுக எம்.எல்.ஏ. கலைராஜன் செருப்பைத் தூக்கிக் காட்டியதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி
Saturday, April 7, 2007
அடித்து நொறுக்கப்பட்டது அதிமுக எம்.எல்.ஏ. வீடு
Posted by
Boston Bala
at
1:35 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment