.

Saturday, April 7, 2007

☈ காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர், ஏப். 7: காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ரன்வீர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தியை நினைவு கூரும் வகையில் அவர் பெயரில் பெருமைமிக்க அமைதி விருது 1995-ம் ஆண்டு முதல் இந்திய அரசால் வழங்கப்படுகிறது.

பிரதமர் தலைமையிலான குழு ஆண்டுதோறும் விருதுக்கு உரிய நபரை தேர்ந்தெடுத்து சிறப்பித்து வருகிறது.

அந்த வகையில் 2006-ம் ஆண்டுக்குரிய காந்தி அமைதி விருது பெற சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் வன்முறை இல்லாத வகையில் அல்லது காந்திய வழியில் சமூகநீதி, மதநல்லிணக்கத்துக்கு அரும்பாடுபட்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் ஆற்றிய பணிகளை விவரமாக தொகுத்து எழுதி ஆட்சியருக்கு அனுப்பலாம்.

தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசு மூலமாக இந்திய அரசுக்கு வரும் 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

எனவே, காந்தி அமைதி விருதுக்கு மனு செய்ய விரும்பும் தனிநபர்கள், நிறுவனங்கள் காந்திய வழியில் தாங்கள் ஆற்றிய பணிகளை தொகுத்து உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...