.

Tuesday, May 22, 2007

கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார்.

சென்னை நகர காவல்துறையில் புதிதாக 2வது கூடுதல் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில் குமார் பொறுப்பேற்றார். சென்னை நகர ஆணையராக லத்திகா சரண் உள்ளார். இவரது பணிகளை பகிர்ந்துகொள்ளும் விதமாக கூடுதல் ஆணையராக ஜாங்கிட் உள்ளார். இந் நிலையில் தற்போது 2வது கூடுதல் ஆணையர் பதவியை திமுக அரசு உருவாக்கியுள்ளது. 2வது கூடுதல் ஆணையராக சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை நகரில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் போராட்டம் நடத்தியபோது சுனில்குமாரை ஸ்டாலின் தள்ளி விட்டதாக சர்ச்சை கிளப்பப்பட்டது. ஸ்டாலின் மீது புகார் தருமாறு சுனில்குமாரை ஜெயலலிதா அரசு நெருக்கியது. ஆனால், ஸ்டாலின் என்னை தள்ளிவிடவில்லை என்று கூறிய சுனில்குமார், இது தொடர்பாக புகார் தரவும் மறுத்துவிட்டார். இதனால் இவரை அதிமுக அரசு ஓரங்கட்டி வைத்தது. அந்த சுனில்குமார்தான் தற்போது 2வது கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போக்குவரத்துப் பிரிவை கவனிப்பார். ஜாங்கிட் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவை கவனிப்பார். இதேபோல மத்திய சென்னை இணை ஆணையர் பதவிக்கு புதிதாக பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...