.

Tuesday, May 22, 2007

ச: எஸ்.பி. பிரேம்குமார் டிஸ்மிஸ்

முன்னாள் ராணுவ வீரரையும், அவரது மனையும் கை விலங்கிட்டு தெருவில் இழுத்துச் சென்ற வழக்கில் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.பி. பிரேம்குமார் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த நல்லகாமன் என்பவரையும், அவரது மகனையும் நடு ரோட்டில் அடித்து உதைத்து கையில் விலங்கிட்டு தெருத் தெருவாக இழுத்துச் சென்று சித்தரவதை செய்ததாக பிரேம்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிரேம் குமாருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்தது. தீர்ப்பை எதிர்த்து பிரேம்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் தற்போது அவர் முன்ஜாமீனில் உள்ளார்.

எஸ்.பி. பிரேம்குமார் டிஸ்மிஸ் தாட்ஸ்தமிழ்

நன்றி: வாசகன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...