.

Tuesday, May 22, 2007

ஆசிய கிராண்ட் பிரீ: முதன்முறையாக இந்தியா சார்பில் சென்னை வீரர் பங்கேற்பு

ஆசிய கிராண்ட் பிரீ பந்தயத்தில் முதன்முறையாக இந்தியா சார்பில் சென்னை வீரர் திலிப் ரோஜர் (22) பங்கேற்கிறார். ஆறு சுற்றுகள் கொண்ட ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை திலிப் ரோஜர் பெறுகிறார்.

ஹோண்டா சிபிஆர் 600 சிசி மோட்டார் சைக்கிளில் இவர் பந்தயத்தில் பங்கேற்கிறார். இப்போட்டியின் முதல் சுற்று இந்தோனேசியாவில் ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த பருவத்தில் உயர்நிலைப் போட்டிகளில் திலிப் பங்கேற்பது இதுவே முதல் தடவை.

இந்தோனேசியா, சீனா, ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்கும் இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...