.

Thursday, May 17, 2007

குடியரசுத் தலைவர் மனைவிக்கு கட்டுப்பாடு அதிகம்: நாராயணமூர்த்தி மனைவி பேட்டி

புணே, மே 17: குடியரசுத் தேர்தலில் 'இன்போசிஸ்' தலைவர் நாராயண மூர்த்தி போட்டியிடப் போவதாக நிலவி வரும் கருத்துக்கள் வெறும் வதந்திகளே என அவரது மனைவி சுதா மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.

"மக்களைச் சந்திப்பதில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவையும், புத்தகங்கள் எழுதுவதும் எனக்கு விருப்பமான செயல்கள். ஆனால், குடியரசுத் தலைவரின் மனைவிக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அவ்வாறு வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் எனது கணவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறுவது வெறும் வதந்தி' என அவர் கூறினார்.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...