எஸ்டோனிய அரசாங்க கணனி வலையமைப்புகள் மீதான இணையத் தளம் மூலமான தாக்குதலை, இராணுவ ஆக்கிரமிப்புடன் ஒப்பிட்டுள்ள நேட்டோ அமைப்பு, இந்த தாக்குலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்காக ஒரு நிபுணரை அங்கு அனுப்பியுள்ளது.
இந்த இணையத்தளம் மூலமான தாக்குதல் குறித்து எஸ்டோனியா ரஷ்யா மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதல் ரஷ்ய அரசாங்கத்தினாலேயே ஆரம்பிக்கப்பட்டதாக எஸ்டோனியா கூறும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
எஸ்டோனியர்கள் தமது நடவடிக்கைகள், வணிகங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மையப் பகுதி வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளது.
எஸ்டோனிய இணையத்தள சார்வர்களை அளவுக்கு அதிகமாக நிரப்பி, அவை முடக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் ஒன்றிணைக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களால், எஸ்டோனிய அரசாங்க இணையங்கள், வங்கிகள் மற்றும் பத்திரிகைகள் ஆகியவை பல தடவைகள் செயலிழந்து போயின.
நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய ஒன்றிய- ரஷ்ய மாநாட்டில் இந்த விவகாரம் முதன்மை விவகாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று எஸ்டோனியா விரும்புகிறது.
- (BBC Tamil)
Russia accused of unleashing cyberwar to disable Estonia | Russia | Guardian Unlimited
Thursday, May 17, 2007
எஸ்டோனிய நாட்டு கணனிகள் மீது இணையத்தளம் மூலம் தாக்குதல்
Posted by
Boston Bala
at
11:14 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment