ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக ஜேம்ஸ் சுதர்லேண்ட், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஓஜியாஸ் பூட்டை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது மூன்றாவது நாட்டில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை பூட் மறுத்துவிட்டார்.
ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வே சென்று ஒருநாள் தொடரில் விளையாட அந்நாட்டு பிரதமர் ஜான் ஹோவார்ட் ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தார்.
பொதுவான இடத்தில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்ற யோசனையை ஏற்க ஜிம்பாப்வே மறுத்துவிட்டதால் தற்போது இந்தப் போட்டிகள் நடைபெறாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நன்றி:- MSN தமிழ்
Tuesday, May 15, 2007
சற்றுமுன்: ஆஸ்திரேலிய யோசனை - ஜிம்பாப்வே மறுப்பு
Labels:
உலகம்,
கிரிக்கெட்
Posted by
கவிதா | Kavitha
at
1:06 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment